எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 31 அக்டோபர், 2018

மதியப் பொழுதைத் தின்பவள்.

நீர்க்கண்ணிகள் வளைந்திறங்கி
வெடித்துக் கிடந்த நிலத்தைச்
சுருக்குகின்றன.
பனை விசிறிகள்
ஆசுவாசமாய் நீர்க் கவரி வீசுகின்றன.
பொடிப்பொடியாய்த்
தெறிக்கும் நீரில் சிறுவிதையாய்
முளைத்துக் குதிக்கின்றன தவளைகள்
ஒரு கால்வாய் கோடிழுக்கத் துவங்கி
நெளிந்து காட்டாறாகிறது.
துணிகளைத் துவைக்க வந்தவள்
புழுக்களைச் சுவைக்கும்
குருவிகளின் கொத்தலை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
நீளமாய் ஓடி சட்டென்று சுருங்குகிறது
ஒரு வெக்கைப் பகல்.
தோட்டத்து செத்தைகளில்
செம்பசையாய் குழுமியிருக்கிறது
விழப்போகும் இளநீருக்கான தளம்.
மெத்தையில் புத்தகங்களோடு
அரைவிழியினை அங்குமிங்கும்
அசைத்துக் கொண்டிருக்கிறாள்
மதியப் பொழுதைத் தின்பவள்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...