எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

உயிர்த்திரவம்

அச்சு வெல்லமே
சர்க்கரைக் கிழங்கே
உன் குரல் கூடப் பாகா வழியுதுடா
உன்னுடன் இருக்கும்போது
ஊரே கண்ணுக்குத் தெரியலடா
உன்னை விட்டுப் பிரிஞ்சால்
உன்மத்தம் பிடிச்சுப் போகுதுடா
ஊனிலும் உயிரிலும் கலந்துவிட்டாய்.
உள்ளிலும் வெளியிலும்
உருகி நின்றேன்
நான் மருகி நின்றேன்
என்ன நிகழ்கிறதெனக்குள் ..?
நினவும் பிசகுகிறது.
உன் குரல் மட்டும்
என்னுள் இறங்குகிறது.
உயிர்தொட்டு உயிர்ப்பிக்கும்
கலை எங்கு கற்றாய்
உன் உயிர்திரவம் சொட்டும்
குரல் மட்டும் அனுப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...