எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 13 ஜூன், 2014

நம்பிக்கை



நம்பிக்கை
===============
ஒட்டகங்கள் நடந்தன
செருக்காய் …
திமிலில் நீர் சொருகிய
செருக்காய்
ஒய்யாரமாய்
முதுகு வளைத்துக் காண்பித்து,
அலட்சியக் கால் புதைத்து
ஒட்டகங்கள் நடக்கத்தான்
செய்தன.
என்றேனும் ஒருநாள்
பாலையைக் கடப்போமென. 
தினமும் விடியல்
சுட்டுவிட்டுத்தான் சென்றது.
கரைந்து போனது
நீர் மட்டுமல்ல.
திமிலில் திமிறிய
கொழுப்பும் தான்.
குறைந்து போயின
ஒட்டகங்கள்
இருந்தாலும் அவை
நடக்கத்தான் … அல்ல
நகரத்தான் செய்கின்றன
ஒட்டகங்கள்
தள்ளாடும் ஒட்டகங்கள்..

2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

கவிதை அருமையாக இருந்தது சகோதரி.
Killergee
www.killergee.blogspot.com

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கில்லர்ஜி

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...