எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 14 ஏப்ரல், 2014

காற்றுப் பேருந்து..

கிளம்பும்போதோ
மிதக்கும்போதோ
இறங்கும்போதோ
உராய்ந்து சிதறுமோ
நெருப்புப்பிடித்தெரியுமோ
நீரில் மூழ்குமோ
மலையில் மோதுமோ
திசை தப்பிப் போகுமோ
கடத்தப்படுமோவென
நூற்றைம்பதுச் சொச்சம்
உயிர்களோடு பறந்தாலும்
இனமற்ற பயம் உருள்வதைத்
தவிர்க்க முடிவதில்லை..
ஒவ்வொரு முறையும்
காற்றுப் பேருந்தில்
கால் வைக்கும் தருணத்தில்...

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒவ்வொரு நொடியும் பயம் தான் - வீட்டிலும்...

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் தனபாலன் சகோ.

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...